« இல்லம்

கைப்பேசிகளால் புகைப்படம் எடுத்தல்வானம்பாடிகதிரைச் சிலேடை வெண்பா 17-20என்றென்றும் பல்ஸ்தீன்கதிரைச் சிலேடை வெண்பா 16,17கதிரைச் சிலேடை வெண்பா 11-15கதிரைச் சிலேடை வெண்பா 6 -10கதிரைச் சிலேடை வெண்பா 1- 5மறுமொழி மட்டறுத்தல்யாழப்பாண நூல்நிலையம்  »







ஈழத்து நூல்கள்
இப்பதிவில் 14ம் நூற்றாண்டு தொடக்கம் 18ம் நூற்றாண்டு வரை ஈழத்தில் வெளிவந்த நூல்கள் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன.

சரசோதி மாலை - சோதிட நூல்
செகராசசேகரமாலை - சோதிட நூல்
செகராசசேகரம் - வைத்திய நூல்
பரராசசேகரம் - வைத்திய நூல்
தஷிண கைலாச புராணம் - கோணச பெருமானையும் மாதுமையம்மையாரையும் பற்று கூறும் தலபுராணம்
கண்ணகி வழக்குரை, கோவலனார் கதை, சிலம்பு கூறல் - சிலப்பதிகார கதை மாற்றங்களுடன் கூடியது
இரகுவம்மிசம் - காளிதாசரின் இரகுவமிசத்தின் தமிழாக்கம்
வையாபாடல் - இலங்கையரசன் குலங்களையும் குடிகள் வந்த முறையையும் கூறும் நூல்.
கோணேசர் கல்வெட்டு - கோணேசர் கோயில் வரலாறு கூறும் நூல்
கைலாயமாலை - கைலாயநாயர் கோயில் வரலாற்றையும் யாழ்ப்பாணத்தரசர் வரலாற்றையும் கூறும் நூல்
வியாக்கிரபாத புராணம் - வடமொழியிலுள்ள வியாக்கிர மான்மியத்தின் தமிழ் வடிவம்
திருக்கரைசைப் புராணம் - தரைசைப்பதியின் நாதனான சிவனைப்பாடும் நூல்
கதிரைமலைப்பள்ளு - ஈழத்தெழுந்த முதல் பள்ளுப் பிரபந்தம்
ஞானப்பள்ளு - கத்தோலிக்க சமயத்தை புகழ்ந்து இயேசு நாதரை பாட்டுடைத்தலைவராய் கொண்ட நூல்.
அர்ச். யாகப்பர் அம்மானை - கிழாலி யாக்கோபு ஆலயத்தின் மீதெழுந்த நூல்.
ஞானானந்த புராணம் - கிறீத்தவ மத விளக்க புராணம்.
சிவாராத்திரி புராணம் - சிவராத்திரி விரத சரிதையை கூறும் நூல்.
ஏகாதசி புராணம் - ஏகாதசி விரத நிர்ணயத்தையும் மகிமையையும் அனுட்டித்தோர் சரிதங்களையும் கூறும் நூல்
கிள்ளை விடுதூது - காங்கேசன்துறை கண்ணியவளை குருநாத சுவாமி மீது வரதபண்டிதரால் பாடப்பட்ட நூல்.
பிள்ளையார் கதை - பிள்ளையாரிற்கான விரதங்களை கூறும் நூல்.
அமுதாகரம் - விட வைத்திய நூல்.
திருச்செல்வர் காவியம் - கிறீத்தவ மத உயர்வை கூற எழுந்த நூல்.
வெருகல் சித்திரவேலாயுதர் காதல் - வெருகற் பதியில் எழுந்தருளியிருக்கும் சித்திரவேலாயுத சுவாமி மீது பாடப்பட்டது.
சந்தான தீபிகை - சந்தான பலனை இனிது விளக்கும் நூல்.
கல்வளையந்தாதி - சண்டிலிப்பாய் கல்வளை விநாயகர் மீது பாடப்பட்ட அந்தாதி நூல்.
மறைமசையந்தாதி - வேதாரிணியத்திற் கோயில் கொண்ட வேதாரணியேசுவரர் மீது பாடப்பட்ட நூல்.
கரவை வேலன் கோவை - கரவெட்டி வேலாயுதபிள்ளையை பாடும் நூல்.
பறாளை விநாயகர் பள்ளு - பாறாளாயில் எழுந்தருளியுள்ள விநாயப்பெருமானை பாடும் நூல்.
பஞ்சவன்னத் தூது
சிவகாமியம்மை துதி - இணுவிலில் எழுந்தருளியிருக்கும் சிவகாமியம்மை மீது பாடப்பட்ட நூல்.
தண்டிகைக்கனகராயன் பள்ளு - கனகராயன் என்பவரை பாட்டுடைத்தலைவராய் கொண்டு பாடப்பட்ட நூல்.
புலியூரந்தாதி - சிதம்பரத்தீசனை போற்றிப்பாடிய நூல்.
காசியாத்திரை விளக்கம்.

இது ஈழத்து தமிழிலக்கிய வளர்ச்சி எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது (கலாநிதி. க. செ. நடராசா -1982)

 
13 பின்னூட்டங்கள்:
நல்லது பகீ, உங்கள் முயற்சி பாராட்டுதற்குரியதே தேவைப்படும்போது நீர் தந்த இந்த நாகாஸ்திரத்தை பிரயோகிக்கின்றேன்

நல்லது பகீ, உங்கள் முயற்சி பாராட்டுதற்குரியதே தேவைப்படும்போது நீர் தந்த இந்த நாகாஸ்திரத்தை பிரயோகிக்கின்றேன்

இதுவரை நான் அறிந்திராத விவரங்கள்.
தகவலுக்கு மிக நன்றி.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

பகீ!
நல்ல தகவல்கள்; கரவை வேலன் கோவை பாடியது கல்லடி வேலரா???
யோகன் பாரிஸ்

வருகைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

யோகன், கரவை வேலன் கோவை பாடியது கல்லடி வேலராய் இருக்க முடியாது. ஏனென்றால் இவையனைத்தும் 18ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூல்கள்.

//கரவை வேலன் கோவை பாடியது கல்லடி வேலராய் இருக்க முடியாது//
கரவை வேலன் கோவை ஒரு சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. இதனை எழுதியவர்: நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்.

இவர் இணுவில் சின்னத்தம்பிப் புலவரல்ல. மேற்கூறிய சுட்டியில் அவரைப் பற்றி எழுதியுள்ளேன்.

what good thing ur doing, congratulation , continue continue continue.......

வருகைகளுக்கு நன்றி. Kanags தகவலுக்கு நன்றி.

பகீ
ஈழத்து இலக்கியங்கள் பற்றிய நல்ல பதிவு இது. நன்றி.
பறாளாய் விநாயகர் பள்ளு என்ற நூலைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனா படித்ததில்லை.
சுழிபுரம் என்ற ஊரில் நாற்புறமும் வயல்கள் சூழ்ந்திருக்க நடுவிலே பறாளாய் விநாயகர் கோயில் அமைந்திருக்கிறது, மிகவும் புராதானமான கோயிலிது. இந்த பெருமைமிக்க கோயிலைப்பற்றி சில கர்ணபரம்பரைக் கதைகள் உண்டு
1. ஒல்லாந்தர் இந்தக் கோயிலை இடிக்க முற்பட்டபோது காகங்கள் அவர்களைக் கொத்ததிக் கலைத்தததாகவும் அதனால் ஒல்லாந்தர் இப்பிள்ளையார் கோயிலை இடிக்காமற் விட்டுச்சென்றதாகக் கூறப்படுகிறது
2. இந்தக் கோயிலில் மிகவும் பழமைமிக்க தேர் ஒன்று உண்டு. அத் தேரிலுள்ள நுட்பமான முறையில் மரத்தில் செதுக்கப்பட்ட கலையம்சமிக்க சிற்பங்கள் மிகவும் பிரபல்யானவை. அத் தேரினைச் செய்தவர் வெள்ளோட்டத்தின் போது குருவியாகப் பறந்து நென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
எனது ஊர்க் கோயிலைப்பற்றி நான் எழுதும் போது எனக்கும் பெருமையாயிருக்கிறது.
நன்றி

பகீ
ஈழத்து இலக்கியங்கள் பற்றிய நல்ல பதிவு இது. நன்றி.
பறாளாய் விநாயகர் பள்ளு என்ற நூலைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனா படித்ததில்லை.
சுழிபுரம் என்ற ஊரில் நாற்புறமும் வயல்கள் சூழ்ந்திருக்க நடுவிலே பறாளாய் விநாயகர் கோயில் அமைந்திருக்கிறது, மிகவும் புராதானமான கோயிலிது. இந்த பெருமைமிக்க கோயிலைப்பற்றி சில கர்ணபரம்பரைக் கதைகள் உண்டு
1. ஒல்லாந்தர் இந்தக் கோயிலை இடிக்க முற்பட்டபோது காகங்கள் அவர்களைக் கொத்ததிக் கலைத்தததாகவும் அதனால் ஒல்லாந்தர் இப்பிள்ளையார் கோயிலை இடிக்காமற் விட்டுச்சென்றதாகக் கூறப்படுகிறது
2. இந்தக் கோயிலில் மிகவும் பழமைமிக்க தேர் ஒன்று உண்டு. அத் தேரிலுள்ள நுட்பமான முறையில் மரத்தில் செதுக்கப்பட்ட கலையம்சமிக்க சிற்பங்கள் மிகவும் பிரபல்யானவை. அத் தேரினைச் செய்தவர் வெள்ளோட்டத்தின் போது குருவியாகப் பறந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
எனது ஊர்க் கோயிலைப்பற்றி நான் எழுதும் போது எனக்கும் பெருமையாயிருக்கிறது.
நன்றி

பகீ
ஈழத்து இலக்கியங்கள் பற்றிய நல்ல பதிவு இது. நன்றி.
பறாளாய் விநாயகர் பள்ளு என்ற நூலைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனா படித்ததில்லை.
சுழிபுரம் என்ற ஊரில் நாற்புறமும் வயல்கள் சூழ்ந்திருக்க நடுவிலே பறாளாய் விநாயகர் கோயில் அமைந்திருக்கிறது, மிகவும் புராதானமான கோயிலிது. இந்த பெருமைமிக்க கோயிலைப்பற்றி சில கர்ணபரம்பரைக் கதைகள் உண்டு
1. ஒல்லாந்தர் இந்தக் கோயிலை இடிக்க முற்பட்டபோது காகங்கள் அவர்களைக் கொத்ததிக் கலைத்தததாகவும் அதனால் ஒல்லாந்தர் இப்பிள்ளையார் கோயிலை இடிக்காமற் விட்டுச்சென்றதாகக் கூறப்படுகிறது
2. இந்தக் கோயிலில் மிகவும் பழமைமிக்க தேர் ஒன்று உண்டு. அத் தேரிலுள்ள நுட்பமான முறையில் மரத்தில் செதுக்கப்பட்ட கலையம்சமிக்க சிற்பங்கள் மிகவும் பிரபல்யானவை. அத் தேரினைச் செய்தவர் வெள்ளோட்டத்தின் போது குருவியாகப் பறந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
எனது ஊர்க் கோயிலைப்பற்றி நான் எழுதும் போது எனக்கும் பெருமையாயிருக்கிறது.
நன்றி

சுந்தரி வருகைக்கு நன்றி. உங்களுக்காகவேனும் பறாளாய் பிள்ளையார் கோவில் சென்று புகைப்படம் எடுத்து பதிவில் சேர்க்க முயற்சிக்கிறேன்.

நன்றி பகீ
மேலும் அக் கோயில்ப் பிள்ளையார் காக்கைகள் (ஆகி) மூலம் ஒல்லாந்தரை கலைத்தபடியால் அப் பிள்ளையாருக்கு காக்கைக் கொத்திப் பிள்ளையார் என்று பெயரும் உண்டு

சுந்தரி



பின்னூட்டம் ஒன்றை இட






முன்னைய அலட்டல்கள்:
கைப்பேசிகளால் புகைப்படம் எடுத்தல்
வானம்பாடி
கதிரைச் சிலேடை வெண்பா 17-20
என்றென்றும் பல்ஸ்தீன்
கதிரைச் சிலேடை வெண்பா 16,17
கதிரைச் சிலேடை வெண்பா 11-15
கதிரைச் சிலேடை வெண்பா 6 -10
கதிரைச் சிலேடை வெண்பா 1- 5
மறுமொழி மட்டறுத்தல்
யாழப்பாண நூல்நிலையம்

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads


Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution