« இல்லம்

கூகிளின் முதற்பக்கம்விடைபெறுகிறது புளொக்கர் பேற்றாகூகிள் - 2006 இன் அதிக தேடல்கள்புளொக்கருக்கு ஒரு Chatகூகிள் மென்பொருள்கள்கூகிள் நேற்றைய அனுபவம்ஆறுமுக நாவலர் - பிறந்த தினம்புளொக்கர் சில வித்தைகள் - 3அட - 2புளொக்கர் சில வித்தைகள் - 2  »







வரதர் ஐயா காலமானார்
ஈழத்து இலக்கிய உலகில் மூத்தானாய் நிமிர்ந்து நின்று அழகு செய்து வரதர் ஐயா அவர்கள் இன்று காலை காலமானார்.

கதாசிரியர், நாவலாசிரியர், கவிதையாசிரியர், பதிப்பாசிரியர் போன்ற பல தளங்களிலே சளைக்காது தொடர்ந்து செயற்பட்டு வந்தவர் வரதர் ஐயா அவர்கள்.1940 இலே ஈழகேசரிபத்திரிகை மூலம் இலக்கிய உலகிலே நுழைந்து 1943 இலே இலக்கிய மறுமலர்ச்சி சங்கத்துக்கு கால்கோள் அமைத்து 1946 இல் மறுமலர்ச்சி சஞ்சிகையை வெளியிட்டு ஈழத்து இதழியல் வரலாற்றில் தன் பெயரை ஆழமாக முத்திரையிட்டவர் வரதர் அவர்கள். இதனைவிட ஆனந்தம், வெள்ளி, புதினம், தேன்மொழி, அறிவுக்களஞ்சியம் போன்ற சஞ்சிகைகளை காலத்துக்கு காலம் வெளியிட்டு தன் சுவடுகளை இதழியல் துறையில் ஆழப்பதித்தவர்.

ஈழத்து இலக்கி உலகிலே தனது இருப்பை ஆழ அகல பதிந்து இலங்கை அரசின் இலக்கிய வாதிகளுக்கான அதியுயர் விருதான சாகித்திய இரத்தினம் விருதை முதன்முதல் பெற்ற தமிழ் இலக்கியவாதியாகவும் இவர் திகழ்கின்றார்.

இதனைவிட பிரச்சனைகள் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில் யாழ்ப்பாணம் எரிகின்றது, மற்றும் 24 மணி நேரம் போன்ற நூல்களை வெளியிட்டு துணிச்சலுடன் செயலாற்றிய ஒரு பதிப்பாசிரியர், நூல்வெளியீட்டாளர்.

முதன்முதலாக ஈழத்தில் கவிதைக்கென சஞ்சிகை நடாத்திய புரட்சிவாதியும் இவரே

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக.

 
10 பின்னூட்டங்கள்:
அஞ்சலிகள்.

கடந்த மூன்று-நான்கு ஏ.ஜே., சு.வில்வரத்தினம், இரட்ணசபாபதி, அன்டன் பாலசிங்கம் என்று பலரை இழந்துகொண்டு வருகிறோம். :(

:-(

உங்கள் செய்தியைப் பார்த்தவுடனேயே நெஞ்சில் சுருக்கென்றது. கடந்த முறை அவரைச் சந்தித்துப் பேட்டி எடுக்க அனுமதி எடுத்து அன்பாகப் பேசி வழியனுப்பி வைத்தவர். மனம் வலிக்கின்றது. அன்னாருக்கு என் இதய அஞ்சலிகள்

தொடரும் மரணச் செய்திகள்.. :-(

ஈழ இலக்கிய உலகுக்குப் பேரிழப்பே!!!!
பட்டகாலே படும் என இதைத் தான் கூறுவதோ!!!
அன்னார் ஆத்மா சாந்தியடையட்டும்.
யோகன் பாரிஸ்

நாங்களெல்லாம் 'அறிவுக்களஞ்சியம்' வாசித்து வளர்ந்த தலைமுறை.
ஒரு தினசரிப் பத்திரிகையே வெளியிட முடியாத காலப்பகுதிகளில் மாட்டுத்தாள், அப்பியாசக் கொப்பி ஒற்றைகள் போன்றவற்றைக் கொண்டுகூட அறிவுக்களஞ்சியம் வெளிவந்தது.

இந்த மாதத்தில் மட்டுமே அரசியல், இலக்கியம் என்று ஈழத்தவருக்கு எத்தனை பெரிய இழப்புக்கள்?

மறைந்த வரதர் ஐயா அவர்களுக்கு எனது அஞ்சலிகள்.

இது என்ன சோதனைக்காலம். தொடர்ந்து இழப்புக்களாகவே உள்ளதே.

எங்கள் கண்ணீர் அஞ்சலிகள்.

அஞ்சலி செலுத்தியோருக்கு நன்றிகள்

ஊரோடி பகீ

நீளும் மரணங்கள் :-(
........
/நாங்களெல்லாம் 'அறிவுக்களஞ்சியம்' வாசித்து வளர்ந்த தலைமுறை.
ஒரு தினசரிப் பத்திரிகையே வெளியிட முடியாத காலப்பகுதிகளில் மாட்டுத்தாள், அப்பியாசக் கொப்பி ஒற்றைகள் போன்றவற்றைக் கொண்டுகூட அறிவுக்களஞ்சியம் வெளிவந்தது./
வசந்தன் கூறியதுமாதிரி அறிவுக்களஞ்சியம், நங்கூரம் போன்றவைதான் எங்களுக்கு மிகப்பெரும் சொத்தாக ஒரு பருவத்தில் இருந்தன.

-டிசே



பின்னூட்டம் ஒன்றை இட






முன்னைய அலட்டல்கள்:
கூகிளின் முதற்பக்கம்
விடைபெறுகிறது புளொக்கர் பேற்றா
கூகிள் - 2006 இன் அதிக தேடல்கள்
புளொக்கருக்கு ஒரு Chat
கூகிள் மென்பொருள்கள்
கூகிள் நேற்றைய அனுபவம்
ஆறுமுக நாவலர் - பிறந்த தினம்
புளொக்கர் சில வித்தைகள் - 3
அட - 2
புளொக்கர் சில வித்தைகள் - 2

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads


Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution