« இல்லம்

மேலும் இரு வடிவங்கள்இன்றைய சிந்தனை - கருவி.உங்கள் குடிலுக்கு அழகிய நாட்காட்டிவரதர் ஐயாவின் புதிய முயற்சிஇன்னுமொரு மணிக்கூடுபறாளை விநாயகர் பள்ளுஇரண்டு படங்கள்இணையத்தளங்களுக்கான கருவிகள்உங்கள் குடிலுக்கு தமிழ் நாட்காட்டிசுற்றுலாப் போனோம்  »







நற்சிந்தனை
நல்லூரான் திருவடி

நல்லூரான் திருவடியை
நான்நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனடி - கிளியே
இரவுபகல் காணேனடி.

ஆன்மா அழியாதென்று
அன்றெனக்குச் சொன்னமொழி
நான்மறந்து போவேனோடி - கிளியே
நல்லூரான் தஞ்சமடி

தேவர் சிறைமீட்ட
செல்வன் திருவடிகள்
காவல் எனக்காமடி - கிளியே
கவலையெல்லாம் போகுமடி

எத்தொழிலைச் செய்தாலென்
எதவத்தைப் பட்டாலென்
கந்தன் திருவடிகள் - கிளியே
காவல் அறிந்தி்டெடி

பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவோமோ நாங்களடி - கிளியே
ஆறுமுகன் தஞ்சமடி

சுவாமி யோகநாதன்
சொன்ன திருப் பாட்டைந்தும்
பூமியிற் சொன்னாலெடி - கிளியே
பொல்லாங்கு தீருமெடி.

 
13 பின்னூட்டங்கள்:
பகீ,
அருமை. பிரதி எடுத்து வைத்திருக்கிறேன். இது உங்களின் ஆக்கமா?

பகீ
அருமையான பாடல் ; பாரதியாரின் "நெஞ்சில் உரமும் இன்றி" மெட்டில் பாட வேண்டும்; நித்தியசிரியும் அருணாசலக் கவியின் ஓர் பாடல் இம்மெட்டில் பாடியுள்ளார்.
யாவுக்கும் நன்றி!!
யோகன் பாரிஸ்

பகீ!
கடைசிவரி "பூமியிற் சொன்னாலெடி"....என்பதே!!! பொருந்தும் போல் உள்ளது. நான் கூறுவதை யோசித்துப் பார்க்கவும்.
யோகன் பாரிஸ்

வெற்றி, யோகன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. வெற்றி இது என்னுடைய படைப்பு அல்ல? யார் எழுதியது என்றும் தெரியவில்லை. யோகன் தெரிந்தால் சொல்லுங்கள்.

வணக்கம் பகீ

இந்தப்பாடல் யோகர் சுவாமிகளுடையது. என் ஆக்கம் இதோ
http://kanapraba.blogspot.com/2006/07/blog-post_08.html

கானா பிரபா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. நற்சிந்தனை என்ற பெயரும் கடைசி பாடலின் முதல் வரியும் இதை எனக்கு உணர்த்தியிருந்தாலும். உறுதியாக தெரியாத படியால் குறிப்பிடவில்லை. தங்கள் பதிவை படித்தேன். மிகச்சிறப்பாயிருந்தது.
வெற்றி கானா பிரபாவின் பதிவையும் இதுவரை பார்க்காவிட்டால் பார்க்கவும். பூரண விபரம் உண்டு

பகீ,
/*சுவாமி யோகநாதன்
சொன்ன திருப் பாட்டைந்தும்
பூமியிற் சொன்னானெடி */

யார் இந்தச் சுவாமி யோகநாதன்? யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகளா?
அவர் சொன்ன திருப்பாட்டு ஐந்து உங்களிடம் கைவசம் இருக்கிறதா?

நன்றி.

யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள் தான். நிச்சயம் யோகர் சுவாமிகளின் படைப்புகளை வலையேற்ற முயற்சிக்கியேன்.

பின்னூட்டத்திற்கு நன்றி வெற்றி

பகீ, யாழ்ப்பாணம் யோகசுவாமிகளைப் பற்றியும் அவரது நற்சிந்தனைகளையும் எனது வலைப்பக்கத்தில் பதிந்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் சென்று பார்க்கலாம்:

யோக சுவாமிகள்

யோகன் உங்கள் திருத்தமே சரியானது. நற்சிந்தனை புத்தகம் நண்பரிடம் இருந்து பெற்று பார்த்தேன். நன்றி. பதிவிலும் மாற்றிவிட்டேன். வெற்றி ஐந்து பாடல்கள் என்பது முதல் ஐந்து பாடல்களைத்தான்.

மிகவும் எளிமையாகவும் அருமையாகவும் இருக்கிறது பகீ. ஏற்கனவே யோகர் சுவாமிகளைப் பற்றி உங்கள் பதிவில் படித்திருந்ததால் இந்தப் பாடலைப் படிக்கத் தொடங்கியவுடன் இது யோகர் சுவாமிகள் எழுதியதாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. சில நண்பர்களுக்கு இந்தப் பதிவின் சுட்டியை அனுப்ப எண்ணியிருக்கிறேன்.

நன்றி குமரன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

முருகா முருகா முருகா!

தமிழ் இனிமையென்றால்...அந்த இனிமையைக் கொண்டு வாழ்வில் இனிமை கூட்டும் வள்ளற் பெருமான் வேலவனைப் பாடுவதும் படிப்பதும் கேட்பதும் எத்துணை இனிமை.



பின்னூட்டம் ஒன்றை இட






முன்னைய அலட்டல்கள்:
மேலும் இரு வடிவங்கள்
இன்றைய சிந்தனை - கருவி.
உங்கள் குடிலுக்கு அழகிய நாட்காட்டி
வரதர் ஐயாவின் புதிய முயற்சி
இன்னுமொரு மணிக்கூடு
பறாளை விநாயகர் பள்ளு
இரண்டு படங்கள்
இணையத்தளங்களுக்கான கருவிகள்
உங்கள் குடிலுக்கு தமிழ் நாட்காட்டி
சுற்றுலாப் போனோம்

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads


Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution